நேபாளத்தின் 2வது கட்ட பிரதேச தேர்தல் ஜுன் திங்கள் 28-ஆம் நாள் நடைபெற உள்ளது. இதனால், கஞ்சன்பூரி பிரதேசத்திலுள்ள நேபாள-இந்திய எல்லை 48மணிநேரம் மூடப்படும்.
நேபாள மற்றும் இந்திய ஒருங்கிணைப்புக் குழு 12-ஆம் நாள் மகேந்திரநகரில் நடத்திய கூட்டத்தில், இம்முடிவு எடுக்கப்பட்டது.
இத்தேர்தல் தடையின்றி நடைபெறுவதற்கு உத்தரவாதம் செய்யும் வகையில், எல்லை கோட்டுக்கு அருகில் பாதுகாப்புக் கண்காணிப்பை வலுப்படுத்த இரு தரப்பும் ஒப்புகொண்டுள்ளன. போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல், காட்டு விலங்குகள் கடத்தல் உள்ளிட்ட எல்லை கடந்த குற்ற நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக, இரு நாடுகளும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் என்று கஞ்சன்பூரின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.(தேன்மொழி)