• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடகிழக்கு இந்தியாவில் மழை வெள்ளம் – 12 பேர் சாவு
  2017-06-14 15:06:41  cri எழுத்தின் அளவு:  A A A   

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம் மற்றும் அசாமில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையைத்தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்துக்கு 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களில் வெள்ளத்தின் பாதிப்பால் மிசோரமில் 10 பேரும், அசாமில் மின்சாரம் பாய்ந்து 2 பேரும் உயிரிழந்தனர்.

திங்கள்கிழமை இரவு முதல் பெய்த மழையால் இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கதேசம், மியான்மார் நாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள மிசோரம் பகுதிகளில் 350 வீடுகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 72 மணி நேரத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040