• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிரியா பிரச்சினை பற்றிய அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஐ.நாவின் கருத்து
  2017-06-18 16:24:27  cri எழுத்தின் அளவு:  A A A   
சிரியா பிரச்சினைக்கான ஐ.நா தலைமைச் செயலாளரின் சிறப்புத் தூதர் ஸ்டாஃபென் தே மிஸ்துரா 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், சிரியா பிரச்சினை குறித்த புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை ஜுலை 10ஆம் நாள் துவக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஐ.நா பாதுகாப்பவையின் தொடர்புடைய தீர்மானத்தின்படி, அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளை அழைக்க உள்ளேன். தேசிய அளவில் ஒற்றுமையான அரசை உருவாக்குவது, அரசியல் அமைப்புச் சட்டத்தை சீர்திருத்துவது, பொதுத் தேர்தலை மீண்டும் நடத்துவது, பயங்கரவாதத்தை எதிர்ப்பது ஆகியவை, சிரியா பிரச்சினை குறித்த புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையின் மைய கருப்பொருட்கள் ஆகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040