இலங்கை கடற்படை 18-ஆம் நாள் தமிழ் நாட்டைச் சேர்ந்த 5 மீனவர்களைக் கைது செய்து அவர்களுடைய கப்பல்களைக் காப்பில் வைத்துள்ளது என்று அனைத்திந்திய வானொலி நிலையம் தெரிவித்தது.
தமிழ் நாட்டுக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடல் பகுதியில் மீன்களைப் பிடித்துகொண்டிருந்தபோது இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும், இந்திய மீனவர்கள் தனது நாட்டைச் சேர்ந்த கடலில் நுழைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது என்றும் அனைத்திந்திய வானொலி நிலையம் வெளியிட்ட செய்தியில் கூறபட்டுள்ளது.(தேன்மொழி)