தெற்குச் சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் நாடுகளின் விளையாட்டுப் போட்டியில், இந்திய குங்ஃபூ விளையாட்டு வீரர் கியந்தாஷ் சிங் மயங்லம்பம், முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
குங்ஃபூ விளையாட்டுப் போட்டியில், பிரேசில், ரஷியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, சீனா முதலிய 33 விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 27 வயதான இந்திய விளையாட்டு வீரர், 12 ஆண்டுகளாக, குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். சர்வதேச விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்க அவர் பெறுவது இதுவே முதல்முறை.