அடுத்த பத்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலான ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து, பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பயனுள்ள முறையில் விவாதம் நடத்தியுள்ளனர் என்றும், பிரிக்ஸ் நாடுகள் முன்னேற்றம், நிதானம் மற்றும் விரைவுப்படுத்தல் ஆகிய பங்குகளை ஆற்ற வேண்டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 19-ஆம் நாள் பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் செய்தியாளர் கூடத்தில் கூறினார்.
சீனா, மற்ற உறுப்பு நாடுகளுடன் இணைந்து, புதிதாக விரைவாக வளர்ச்சியடையும் துறைகளில் ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, விரிவான அளவில் கூட்டாளி உறவை உருவாக்கும் என்றும் வாங் யீ தெரிவித்துள்ளார்.(தேன்மொழி)