• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அகதிகள் பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி ஐ.நாவின் வேண்டுகோள்
  2017-06-21 09:27:20  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜூன் 20ஆம் நாள் உலக அகதி தினமாகும். ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் அன்று ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், அகதிகள் பிரச்சினையைத் தீர்ப்பதும், அகதிகளின் உரிமையைப் பாதுகாப்பதும் பற்றி வேண்டுகோள் விடுத்தார். அரசியல் வழிமுறையில் இப்பிரச்சினைக்கான ஊற்றுமூலத்தைத் தீர்க்க வேண்டும் என்றும், இப்பிரச்சினையில் வளர்ந்த நாடுகள் மேலதிகக் கடமைகளை ஏற்று, மேலதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அகதிகள் விவகாரத்துக்கு பொறுப்பான ஐ.நாவின் உயர் ஆணையர் ஃபிளப்போ கிராண்டி அன்று உரை நிகழ்த்தி, பன்னாடுகள் கையோடு கைகோர்த்து, அகதிகள் பிரச்சினையைக் கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதோடு, அகதிகள் பிரச்சினையைத் தீர்க்க பன்னாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040