அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு முதலிய துறைகளில் கடுமையான அறைக்கூவல்களை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் நிதானத்தை விரைவில் மீட்டெடுப்பது அவசரமான பணியாகும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியு ஜியே யீ 21ஆம் நாள் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படையின் திறமை உயர்வைச் சர்வதேசச் சமூகம் பெரிதும் ஆதரிக்க வேண்டும் என்றும் பயங்கரவாதம், நாடு கடந்த குற்றம், போதைப் பொருள் கடத்தல் முதலிய அச்சுறுத்தல்களைப் பயனுள்ள முறையில் சமாளிப்பதில் சர்வதேசச் சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.