சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ 22ஆம் நாள் ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், மத்திய கிழக்குப் பிரச்சினை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை விவரித்தார்.
மத்திய கிழக்குப் பிரதேசத்தில் பதற்ற நிலைமை தொடர்ந்து வருவது, இப்பிரதேசத்தின் நாடுகளுக்கு சீர்குலைப்பையும், உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பிரதேசத்தில் அமைதி மற்றும் நிதானம் வெகு விரைவில் மீட்கப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. ராணுவ முறையில் மத்திய கிழக்குப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அரசியல் வழிமுறை மூலம் இப்பிரதேசத்தின் உண்மைக்கும், பல்வேறு தரப்புகளின் நன்மைக்கும் பொருந்திய திட்டத்தைக் கண்டறிய வேண்டும் என்று வாங் யீ தெரிவித்தார்.
சர்வதேச மற்றும் பிரதேசப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குச் சீனா ஆதரவளிக்கிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஆக்கப்பணியின் கட்டுக்கோப்புக்குள், ஜோர்டான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுடன் எதார்த்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் செழுமையை நனவாக்கி, பயங்கரவாதம் ஏற்படுவதற்கான காரணிகளை வேரோடு ஒழிக்கப் பாடுபட வேண்டும் என சீனா விரும்புவதாக வாங் யீ தெரிவித்தார்.(மீனா)