2018ஆம் ஆண்டின் ஜூலை 7ஆம் நாள் புதிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். இது தொடர்புடைய ஆயத்தப் பணி, மேற்கொள்ளப்பட்டு வருவதாக, ஆப்கானிஸ்தான் சுதந்திரத் தேர்தல் குழு 22ஆம் நாள் காபுலில் அறிவித்தது.
தேர்தல், வெளிப்படை மற்றும் நியாயமான அடிப்படையில் நடைபெறும். தேர்தல் பணியைப் பாதிக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் சட்டத் தடை நடவடிக்கை விதிக்கப்படும் என்று ஆப்கானிஸ்தான் சுதந்திரத் தேர்தல் குழுவின் தலைவர் நஜிபுல்லா அகமத்சை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.