• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு
  2017-06-24 13:45:10  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் வடமேற்குப் பகுதியின் குர்ரம் பிரதேசத்தின் தலைநகர் பரச்சிநரில் ஜூன் 23ஆம் நாளிரவு தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் 18 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேலானோர் காயமுற்றனர்.

காயமுற்றோர் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் கடும் காயமுற்றனர். மேலும், உள்ளூர் காவற்துறையினர்கள் இத்தாக்குதல் குறித்து புலனாய்வு செய்யத் துவங்கியுள்ளனர். இதுவரை, இத்தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்பதாக எந்த அமைப்பும் அறிவிக்கவில்லை. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040