இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி 26ஆம் நாள் முதல் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்குமாறு அமெரிக்க செனெட் அவை உறுப்பினர்கள் 24ஆம் நாள் அரசுத் தலைவர் டிரம்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உயர் சுங்க வரி வசூல், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புத் துறையின் பற்றாக்குறை, அரசு வாரியங்களின் பரிசோதனை மற்றும் நிர்வாக்க் கொளைகளின் வெளிப்படைத் தன்மை குறைவு முதலியவை இரு நாட்டு ஒத்துழைப்பைப் பாதித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், நிதி, சில்லறை, எண் வசதிகள் ஆகியவை தொடர்பான வர்த்தகம் மற்றும் இணையச் சேவை துறையிலும் இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிகக் கட்டுப்பாடு மற்றும் தடைகளை விதித்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.(வாணி)