காஷ்மீர் உண்மை கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகில், பாகிஸ்தானும் இந்தியாவும் மோதல் நடத்துவது, பிரதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கெங்ஷூவாங் 12ஆம் நாள் தெரிவித்தார்.
காஷ்மீர் பிரதேச நிலைமையில் சர்வதேச சமூகம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவும், தெற்கு ஆசியாவின் முக்கிய நாடுகளாகும். இம்மோதல், இரு நாடுகளின் நிதானம் மற்றும் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பிரதேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு நலன் தரப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.