• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் வட மேற்கில் வலுவடையும் பயங்கரவாத எதிர்ப்பு
  2017-07-17 09:35:57  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானின் தரைப்படை மற்றும் வான்படை பாகிஸ்தான்-ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பகுதியின் அருகிலுள்ள மலைப் பிரதேசத்தில் கைபர்-4 எனும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைக் கூட்டாக மேற்கொள்ளத் தொடங்கின. எல்லைப் பகுதியின் ஆப்கன் பக்கத்தில் ஐஎஸ் அமைப்பின் சக்தியைத் தடுத்து, பாகிஸ்தானிலுள்ள ஆயுததாரிகளுடனான இவ்வமைப்பின் தொடர்பைத் துண்டித்து, பாகிஸ்தானுக்குள் அது நுழைவதைத் தடை செய்வது என்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று அந்நாட்டின் முப்படை செய்தி பணியகத்தின் தலைவர் ஆசிஃப் காஃபூர் 16ஆம் நாள் நடைபெற்ற செய்தியாயளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது ஐஎஸ் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் அமைப்பாக செயல்படவில்லை. ஆனால் ஆப்கனில் அதன் சக்தி அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானும் ஆப்கனும் அமெரிக்காவின் வழிகாட்டலில் எல்லை பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்ற கூற்றை அவர் மறுத்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040