• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஷிச்சின்பிங்-அப்பாஸ் பேச்சுவார்த்தை
  2017-07-19 09:17:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 18ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாலஸ்தீன அரசுத் தலைவர் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வை முன்னேற்றுவது குறித்து இரு நாடுகள் என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுமுறையை உறுதியாக முன்னேற்ற வேண்டும், பொதுவான, ஒட்டுமொத்த, ஒத்துழைப்புடன் கூடிய தொடரவல்ல பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் ஊன்றி நிற்க வேண்டும்,  சர்வதேச சமூகத்தை மேலும் ஒருங்கிணைக்க வேண்டும், அமைதியை முன்னேற்றும் கூட்டு முயற்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை ஷிச்சின்பிங் தெரிவித்தார். சீனா முன்வைத்த ஆக்கப்பூர்வ கருத்துக்களை அப்பாஸ் வெகுவாகப் பாராட்டினார். சீன-பாலஸ்தீன நட்பு ஒத்துழைப்பின் பன்முக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று இருநாட்டு அரசுத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

தூதாண்மை, பொருளாதாரம், மனித பயிற்சி, பண்பாடு உள்ளிட்ட துறைகளிலான இருதரப்பு ஒத்துழைப்பு ஆவணங்கள் இருநாட்டுத் தலைவர்களின் முன் கையொப்பமாகின.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040