• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
காலநிலை மாற்றத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை – இலங்கை
  2017-07-19 11:01:36  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் வரும் மாதங்களில் புதிய நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ளும் என்று அந்நாட்டு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கொழும்புவில் உள்ள தலைமை அமைச்சர் அலுவலகத்தில் அவர் கூறும்போது, வறட்சி, உலகத்தை தாக்கத் தொடங்கியுள்ளது. இது, எதிர்காலத்தில் இலங்கைக்கு விளைவுகளை ஏற்படுத்தும். இந்த சூழலை எதிர்கொள்ள முக்கியமான முடிவுகளை அரசு எடுக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், நீடித்திருக்கும் வறட்சி இலங்கையை மட்டும் பாதிக்கவில்லை. இந்தியா, வங்கதேசம் மற்றும் ஒரு சில நாடுகளும் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040