அண்மையில், பாலஸ்தீன அரசுத் தலைவர், துனிசிய வெளியுறவு அமைச்சர்,கத்தார் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் அடுத்தடுத்து சீனாவில் பயணம் மேற்கொண்டனர். எனவே, மத்திய கிழக்கு விவகாரங்களில் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கருதப்படுகிறது.
இந்தக் கூற்று குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் 20ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில்,
தற்போது, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் நிலை முக்கிய தருணத்தில் இருக்கிறது. இந்தச் சிறப்புக் காலத்தில், பிரதேசத்திலுள்ள நாடுகளுடன் ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி, சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்நிலையை சரியான திசையை நோக்கி செல்வதை முன்னெடுக்க சீனா விரும்புகிறது என்றார் அவர்.