• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
  2017-07-23 15:11:15  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈராக் வான்படையின் போர் விமானங்கள் நாட்டின் மேற்கிலுள்ள அல் அன்பர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வட்டங்களின் மீது தாக்குதல் தொடுத்தன. இதில் ஐஎஸ் தீவிரவான அமைப்பின் ஒரு தலைமையகம், இரண்டு ஆயுதப் பண்டசாலைகள், வாகனக் குண்டு தயாரிப்பு ஆலை ஒன்று ஆகியவை அழித்தொழிக்கப்பட்டன. மேலும் இவ்வமைப்பைச் சேர்ந்த பல ஆயுததாரிகளும் கொல்லப்பட்டனர் என்று ஈராக் கூட்டு நடவடிக்கை தலைமையகம் 22ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியது. ஆனால் இந்த வான் தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரம் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040