• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான 7ஆவது உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
  2017-07-25 10:57:40  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான 7ஆவது உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம் ஜூலை 27, 28 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லு காங் 24ஆம் நாள் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்க பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மஹ்லோபோ, பிரேசில் அரசுத் தலைவர் மாளிகை பாதுகாப்பு விவகார அலுவலகத்தின் தலைவர் செர்ஜியோ எட்சிகேயென், ரஷிய கூட்டாட்சி பாதுகாப்புக் கூட்டத்தின் செயலாளர் நிகோவய் பட்ருஷெவ், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
உலக மேலாண்மை, பயங்கரவாத எதிர்ப்பு, இணைய மற்றும் எரியாற்றல் பாதுகாப்பு, முக்கியமான சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி முதலியவை பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040