அம்பணத்தோட்ட துறைமுகத்தின் சிறப்பு நிர்வாகம் பற்றிய இலங்கை-சீன உடன்படிக்கைக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்றம் 28ஆம் நாள் இந்த உடன்படிக்கையைப் பரிசீலனை செய்யும் என்று இலங்கை துறைமுக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த சமரசிங்கே 25ஆம் நாள் கொழும்புவில் தெரிவித்தார்.
இந்த உடன்படிக்கையின் கால வரையறை 99 ஆண்டுகாலமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இரு தரப்பும் இதன் பங்கு விகிதத்தை படிப்படியாகச் சரிப்படுத்தும். இறுதியில், இரு தரப்புக்கும் தனித்தனியே 50 விழுக்காடு பங்குகள் என்ற விகிதத்தை வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.