சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு
2017-08-01 19:49:06 cri எழுத்தின் அளவு: A A A
சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு மாநாடு ஆகஸ்ட் முதல் நாள் பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். சீன தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி, சீன மக்களின் மேலும் அருமையான வாழ்க்கை ஆகியவற்றை நனவாக்கும் வகையில், சீனப் படையை, உலகின் முன்னேறிய படையாக உருவாக்க வேண்டும் என்றும், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த படை ஆக்கப்பணிப் பாதையில் ஊன்றி நின்று, படை ஆக்கப்பணி லட்சியத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் ஷீ ச்சின்பிங் இவ்வுரையில் வலியுறுத்தினார். (மீனா)
உங்கள் கருத்தை பதிவு செய்ய