அமெரிக்காவின் அறிவியல் முன்னேற்றம் எனும் இதழில் வெளியான ஆய்வின்படி, உலகிலுள்ள மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் தென்னாசியாவில் வாழ்கின்றனர். ஆனால், நடப்பு நூற்றாண்டின் இறுதி வரை, தென்னாசியாவின் சில பகுதிகளில் கோடைக்கால வெயில் மனிதர் வாழ்வதற்கான உச்ச வரம்பைத் தாண்டக் கூடும்.
இவ்வாய்வின்படி, பசுங்கூட வாயு வெளியேற்றத்தைப் பெரிதும் குறைக்காமல் இருந்தால், அடுத்த பத்துக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் சில பகுதிகள் உயிரை அச்சுறுத்தும் வெப்ப அலையால் பாதிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.