இந்திய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை தொடங்கியது. இந்த தேர்தலுக்கான வாக்குப் பதிவு, காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலின் முடிவு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்திய குடியரசின் புதிய துணைத் தலைவர் வரும் ஆகஸ்டு 10ஆம் நாள் பதவியேற்க உள்ளார். அதேவேளையில், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் அமீத் அன்சாரினுடைய 5 ஆண்டு காலப் பதவி முடிவுக்கு வரவுள்ளது.