பொறுப்பேற்கும் மனப்பான்மை என்ற அடிப்படையில், தென் சீனக் கடல் பிரச்சினையைக் கையாள்வதில் சீனா எப்பொழுதும் ஊன்றி நின்று வருகிறது. வரலாற்று உண்மையின் அடிப்படையில், டி ஓ சி மற்றும் 1982ஆம் ஆண்டின் ஐ.நா கடல் சட்டத்தின் பொது ஒப்பந்தத்தின்படி, தொடர்புடைய நாடுகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தை என்ற அமைதியான வழிமுறையின் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க சீனா பாடுபடும் என்று வாங்யீ தெரிவித்தார். தற்போது, சர்ச்சையில் சிக்கியுள்ள தொடர்புடைய தரப்புக்கள், பேச்சுவார்த்தையில் மீண்டும் பங்கெடுத்துள்ளன.