சீன சிச்சுவான் மாநிலத்தின் அபா திபெத் மற்றும் ஜியாங் இனத் தன்னாட்சிச் சோவிலுள்ள சியுச்சேய்கோ வட்டத்தில் ஆகஸ்ட் 8ஆம் நாள் 21:19 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 7ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. 9ஆம் நாள் காலை 5மணி வரை, இந்நிலநடுக்கத்தால் 9 பேர் உயிரிழந்தனர். 164 பேர் காயமடைந்தனர்.
தற்போது, போக்குவரத்து மீட்பு, காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை, மீட்புதவி ஆகிய பணிகள் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளூர் பொதுத் துறை, காவற்துறை, தகவல் தொடர்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 1200க்கும் மேலானோரும் 90 இயந்திரங்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.