இலங்கையின் கொழும்பிலுள்ள சீன கலாச்சார மையத்தின் கட்டிடம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் கலந்து கொண்டுள்ள இலங்கை கலாச்சார விவகார துறைத் துணை அமைச்சர் பாலித திவரப்பெருமா பேசுகையில், சீனாவுடன் கலாச்சார தொடர்பை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இந்த சீன கலாச்சார மையம், தெற்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கலாச்சார மையமாகும். இரு நாடுகளுக்கிடையே பண்பாடு மற்றும் கல்வி ஆகிய துறைகளைச் சார்ந்த பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் ஒரு அதிகார்ப்பூர்வமான நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
மேலும், இலங்கையின் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இதன் மூலமாக சீனாவை அறிந்து கொள்வதற்கு இது வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.