• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இளைஞர்களுக்கு ஐ.நா தலைமைச் செயலாளரின் எதிர்பார்ப்பு
  2017-08-13 16:46:07  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஐ.நா கோடைகால இளைஞர் மாநாடு 11ஆம் நாள் நியூயார்க்கில் துவங்கியது. அப்போது, உலக அமைதிக்கு இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் தெரிவித்தார்.

மோதலைத் தடுப்பது, தொடரவல்ல அமைதியை உத்தரவாதம் செய்வது ஆகியவற்றில், இளைஞர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் இளைஞர்களின் கூட்டு முயற்சியுடன், ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களின் பங்குகளை வெளிக்கொணரும் வகையில், 26 வயதான இலங்கை இளைஞர் ஜெயத்ம விக்கிரம நாயகேவை ஐ.நாவின் 2ஆவது இளைஞர் விவகார சிறப்புத்தூதராக குட்டரேஸ் நியமித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040