அண்மையில் அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கினால் பெரும் ஏற்பட்டது. இப்பாதிப்பினால் இது வரை 99 பேர் உயிரிழந்தனர் என்று 14ஆம் நாள் இந்திய செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாம் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள் வெளியிட்ட தகவலின் படி, 13ஆம் நாளில் மட்டும், 10 பேர் வெள்ளப் பெருக்கில் உயிரிழந்துள்ளனர். அதோடு, அசாம் மாநிலத்தின் 21 மாவட்டங்களில் உள்ள சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2734 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுமார் 1 இலட்சத்து 35 ஆயிரம் ஹெக்டர் வேளாண் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(கலைமணி)