பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளையின் துவக்க விழா உள்ளூர் நேரப்படி ஆகஸ்டு 17ஆம் நாள் முற்பகல், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னெஸ்பெர்கில் நடைபெற்றது. அந்நாட்டின் அரசுத் தலைவர் ஜாகோப் ஜூமா இவ்விழாவில் பேசுகையில், ஆப்பிரிக்க நாடுகள், புதிய வளர்ச்சி வங்கி மீது பெரும் எதிர்பார்ப்பு கொள்கின்றன. இவ்வங்கியைச் சேர்ந்த ஆப்பிரிக்கப் பிரிவின் உருவாக்கம், தென்னாப்பிரிக்கா மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா முழுவதையும் பொறுத்தவரை, இது மைல் கல் என்ற முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.
2013ஆம் ஆண்டின் பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்களின் 5வது உச்சி மாநாட்டுக்குப்பின் வெளியிட்ட டர்பன் அறிக்கையில், பிரிக்ஸ் நாட்டு வளர்ச்சி வங்கியை உருவாக்கப் பல்வேறு உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. 2015ஆம் ஆண்டின் ஜூலை திங்கள், பிரிக்ஸ் நாட்டு வளர்ச்சி வங்கி, புதிய வளர்ச்சி வங்கியாக மாறி, ஷாங்ஹாய் மாநகரில் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. (பூங்கோதை)