• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் பிகாரில் வெள்ளத்தால் 119பேர் உயிரிழப்பு
  2017-08-19 13:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் இந்தியாவின் பிகார் மாநிலம் வெள்ளப் பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 119பேர் உயிரிழந்தனர். ஒரு கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டனர் என்று பிகார் மாநிலத்தின் பேரழிவு நிர்வாக அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் 18ஆம் நாள் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 4 நாட்களில், சுமார் 5லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்குக் குடி அமர்த்தப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்திய அரசு 1238 மீட்புதவி மையங்களை நிறுவியுள்ளது. தற்போது, 43 மீட்புதவிக் குழுக்கள் மீட்புதவிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் 4லட்சம் ரூபாய் உதவித்தொகையை வழங்குவதாக உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040