• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிங்காய்-திபெத் பீடபூமியில் துவங்கும் ஆய்வுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
  2017-08-20 15:34:14  cri எழுத்தின் அளவு:  A A A   
சிங்காய்-திபெத் பீடபூமியில் 2ஆவது பன்னோக்க அறிவியல் ஆய்வு 19ஆம் நாள் லாசா நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் அதற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார். இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆய்வாளர்கள், இளம் மாணவர்கள் மற்றும் உத்தரவாத பணியாளர்கள் அனைவருக்கும் அவர் சிறப்பான வாழ்த்துக்களையும் மனமார்ந்த வணக்கங்களையும் தெரிவித்தார்.

மேலும், நடப்பு ஆய்வின் மூலம் சிங்காய்-திபெத் பீடபூமியின் சுற்றுச்சூழல் மாற்ற முறையைக் கண்டறிந்து, இயற்கை பாதுகாப்பு அமைப்பு முறையை மேம்படுத்துவது, சிங்காய்-திபெத் பீடபூமியின் தொடரவல்ல வளர்ச்சி, தேசிய இயற்கை பண்பாட்டு கட்டுமானம் மற்றும் உலக இயற்கைச் சூழல் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கு முக்கிய செல்வாக்கை ஏற்படுத்தும் என்றும் அவர் இச்செய்தியில் சுட்டிக்காட்டினார்.

சீன அறிவியல் கழகத்தின் தலைமையிலான இந்த ஆய்வில், சிங்காய்-திபெத் பீடபூமியிலுள்ள நீர், இயற்கைச் சூழல், மனிதர்களின் செயல்பாடு உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்விடத்தின் வேலி செயல்திறன் பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா கட்டுமானத்துக்கான திட்டம் வழங்கப்படும்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040