பட்ரியட் பிரேயர் எனும் அமெரிக்காவின் வலதுசாரி அமைப்பு பேரணி நடத்துவதற்கு எதிரிப்பு தெரிவித்த்து, சான்ஃபிரான்சிஸ்கோவில் ஆயிரக்கணக்கான நகரவாசிகள் 25ஆம் நாள் நண்பகல் நகர அரசு சதுக்கத்தில் பேரணியை நடத்தி பகைமையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள க்ரிஸி ஃபீல்டு பூங்காவில் வரும் 26ஆம் நாள் மாலை 2 மணி முதல் 5 மணி வரை பேரணி நடத்த பட்ரியட் பிரேயர் அமைப்பு விண்ணப்பித்துள்ளது. அதற்கு 14ஆம் நாள் அனுமதி அளிக்கப்பட பிறகு, சான் பிரான்சிஸ்கோ அரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்புக் காரணம் கருதி, 26ஆம் நாள் பூங்காவில் பேரணி நடத்தும் திட்டத்தை இரத்து செய்வதாக பட்ரியட் பிரேயர் அமைப்பு 25ஆம் நாள் மாலை அறிவித்தது.