முன்பொரு காலத்தில் நாட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டதாம். அவ்வமயம் அரச அலுவலகர்கள் நாட்டில் நல்ல உடல்நலத்தோடு இருந்த அனைவரையும், போர் வீரர்களாக சேர வற்புறுத்தினர். எங்கும் அழுகையும், குழப்பமும், சோகமும் நிறைந்திருந்தது. இரவு நேரங்களில் அழுகையொலியும், புலம்பல் குரலும் அதிகமாகக் கேட்டன. ஆனால், பேரரசனுக்கு நாட்டின் அவல நிலைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை, இது பற்றி அவன் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, அவன் சதுரங்கம் விளையாடியும், வைப்பாட்டிகளுடன் உண்டு குடித்தும், அவர்களை நடனமாடச் செய்து, ரசித்துக்கொண்டிருந்தான். அவனது அமைச்சர்கள் அவனது பார்வைக்கு வைத்த ஆவணங்கள் எல்லாம் கவனிக்கப்படாது மலைபோல் குவிந்தன.