• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:நான்கு கற்சிங்கங்கள்
  2013-02-01 15:19:32  cri எழுத்தின் அளவு:  A A A   

மேலும் சில நாட்கள் கழிந்தன. எனினும் பேரரசன் தலைநகருக்குத் திரும்பவில்லை. சிங்கங்கள் இரண்டும் கீழே பாலத்தினடியில் ஓடிய நதியை நோக்கி " பேரசனே, பேரரசனே, எவ்வளவு நெறியற்றவனாக திரிகிறாய் நீ. நீ அங்கேயே இருந்துவிட்டால் திரும்பிவரும்போது இங்கே நாடென்று ஒன்று இருக்காது" என்று கர்ஜித்தன. கற்சிங்கங்களின் குரல்கள் வானுலகையும், மண்ணுலகையும் அசைத்து, கடலலைகளையும், மேகக்கூட்டங்களையும் கடந்து தென் பகுதியைச் சென்றடைந்தன. பேரரசனின் காதுகளை சிங்கங்களின் கர்ஜனைக் குரல் எட்ட, அவனும் தலைநகருக்கு திரும்பினான். பின்னர் அமைச்சர்களின் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் செவிமடுத்து, அரச விவகாரங்களை, ஆட்சியை சரிவர மேற்கொண்டான். பின்னாளில் மார்கோ போலே பாலத்தின் கற்சிங்கங்கள் பேரரசனின் காவல் சிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.


1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040