• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனக் கதை:நான்கு கற்சிங்கங்கள்
  2013-02-01 15:19:32  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆனாலும், வறட்சியும் பஞ்சமும் ஒருபுறம், மக்களின் இன்னலை கண்டுகொள்ளாமல், படைக்கு ஆள் சேர்ப்பதில் முனைப்பாக இருந்த அரச அலுவலர்கள் ஒருபுறமென, மக்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் தாங்கமுடியாத துன்பமாக மாறிக்கொண்டிருந்தது. பேரரசன் களியாட்டத்தில் கவனம் செலுத்துவதில் நேரத்தில் தொலைத்தான் என்பது இருக்கட்டும், ஆனால் மக்களின் அழுகைக்குரல் இரவு நேரத்தில் அரச மாளிகையில் கேட்டு தன்னை தொல்லை செய்கிறது என்பதால், இனி அழுபவர்கள் எவராயினும் அவர்களது தலை கொய்யப்படும் என்று ஆணையிட்டதுதான் மேலும் கொடுமையாக இருந்தது. பேரரசனின் ஆணையைக் கேள்விப்பட்ட மக்கள் வாய்விட்டு அழக்கூட வழியின்றி கமுக்கமாக கண்ணீர் விட்டனர்.

1 2 3 4 5 6 7
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040