தான் கண்டதையெல்லாம் அண்ணகன் பேரரசனிடம் சென்று விளக்கமாகக் கூறினான். உடனே பேரரசன், அவற்றுள் தலைவனாக இருப்பதை என்னிடம் கொண்டுவா என்று பணித்தான். அண்ணகனும், ஏணியை வைத்து, விலங்குகள் இருந்த கூரையின் முகடு நோக்கி ஏறிய தாமதம், ஆந்தைப் போன்ற பறவை சட்டென அங்கிருந்து பறந்து, தடை செய்யப்பட்ட நகரத்தை விட்டே பறந்தோடியது. அதை விரட்டிப்பிடிக்க ஓடிய அண்ணகன் கீழே இறங்கிச் சென்ரபோது, அரண்மனையின் மதில் வெளியே, நாதியற்றவர்களாய் அழுதுகொண்டிருந்த மக்களைக் கண்டான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அலங்காரத் தூண் மேல் வீற்றிருந்த கற்சிங்கங்கள், "ஓ பேரரசனே! எப்போதுமே மாளிகைக்குள்ளே இருந்து, வைப்பாட்டிகளுடன் களித்துக் களைக்காதே. உடனே வெளியே வந்து, மக்கள் படும் துன்பத்தை கண்ணோக்கு" என்று கர்ஜித்தன. மக்களும் சிங்கங்கள் கோரியதைப் போலவே, கோரினர். குரலொலிகள் அதிகமாக, மாளிகையினுள்ளே இருந்த பேரரசனுக்கு எரிச்சல் அதிகமானது. இறுதியில், மாளிகையிலிருந்து வெளியே வந்தான் பேரரசன். அன்று முதல் அந்தச் சிங்கங்கள் பேரரசனை அழைத்த சிங்கங்கள் என்று அறியப்படலாயின.