சீனாவில் மிகப் பரவலாக உட்கொள்ளப்படும் உணவாக தோஃபூ உள்ளது மட்டுமின்றி உலகளவில் அறியப்பட்ட ஒரு உணவுப்பொருளாகவும் இருக்கிறது. பாலிலிருந்து பாலடைக்கட்டியை எடுப்பது போல, சோயா பாலை திரட்டுவதால் வரும் கட்டியை அப்படியே துண்டுகளாக வெட்டி மக்கள் பயன்படுத்துகின்றனர். இதுதான் தோஃபூவின் அடிப்படை நுட்பம், ஆனால் இதில் பல்வேறு வழிமுறைகள், நுட்பங்கள் உண்டு.
இந்தத் தோஃபூவின் வரலாற்றை புரட்டிப்பார்க்கையில், அதன் ஆரம்பம் கிமு 206ம் ஆண்டு முதல் கிபி 24ம் ஆண்டு வரையான மேற்கு ஹான் வம்சக்காலத்தில், நம் லியு ஆன் வாழ்ந்த காலத்தில் இருந்ததாக அறியமுடிகிறது.