சுவையானது என்பதால் மட்டும் அல்ல, எளிய தயாரிப்பு முறை, அதிக செலவும் இல்லை என்பதால் மக்கள் அனைவருக்கும் பிடித்த உணவுப்பொருளாக தோஃபூ மாறியது. சுங் வம்சக்காலத்திற்கு பின் தோஃபூவின் பயன்பாடும், பண்பாடும் சீன மக்களிடையே ஆழக்கலந்தது. தோஃபூவின் அருமை பெருமைகளை பாராட்டி கல்விமான்களும், புகழ்பெற்ற கலைஞர்களுமாக போட்டிப்போட்டிக்கொண்டு பண்பாட்டுத் தகுநிலையை தோஃபூவுக்கு உருவாக்கினர். வடக்கு சுங் வம்சக்காலத்தின் மாபெரும் எழுத்தாளராக கருதப்படும் சுங் துங்போ, தோஃபூவின் மேல் அலாதி விருப்பம் கொண்டவராக இருந்தார். அவர் தோஃபூவை பயன்படுத்தி புதிதாக உணவுவகையை கண்டுபிடித்தார், அது அவரது பெயரில் துங்போ தோஃபூ என்று அழைக்கபடலாயிற்று. தெற்கு சுங் வம்சக்காலத்தில் வாழ்ந்த லூ யோ அவருடைய கவிதைத்திரட்டில் ஒருவகை தோஃபூ உணவுவகை தயாரிப்பு பற்றி எழுதியுள்ளார். ச்சிங் வம்சக்கால பேரரசர் காங்ஷியின் தோஃபூ தொடர்பான பதிவும் குறிப்பிடத்தக்கது. தென் சீனாவில் பேற்பார்வையிடல் சுற்றுப்பயணமாக சென்றபோது சூஷோவில் தன்னுடைய உயர் அலுவலர்களுக்கு அவர் பொன், வெள்ளிமணிக்கல் போன்ற விலைமதிப்பான பொருட்களை தரவில்லை. உள்ளூர் சுவையுடன் கூடிய பல்வேறு தோஃபூ உணவுவகைகளையே வெகுமதியாக பேரரசர் காங்ஷி தந்தாராம்.