நீண்ட நெடுங்காலத்துக்கு முன் மேகங்களுக்கு மேலே உயர்ந்து கம்பீரமாய் நின்றிருந்த வெள்ளை டிராகன் மலையில் தேவதாரு மரங்களும், சைப்ரஸ் மரங்களும், விந்தையான மலர்களுமாக பசுமை எழில் கொஞ்சியது. ஆனால் அப்போது அதை லுங் மலை என்று அழைப்பர். அந்த மலையில் நான்கு கால் பாம்பு ஒன்று இருந்தது. ஆயிரமாண்டுகள் அடக்கமாக தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியதால் அந்தப் பாம்பு பின் நிலம் வாழ் டிராகனாக மாறியது. இது பின் வெண்ணிற ஆடை அணிந்த அழகிய பெண்ணாக மாறியது. மக்கள் அவளை வெள்ளை டிராகன் என்று அழைத்தனர்.