காலப்போக்கில் அவர்கள் காதல் மேலும் வலுவானது. இருவரும் திருமணம் செய்துகொள்ள உறுதிப்பூண்டனர். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. வானுலகம், மண்ணுலகம், நீருலகம், இந்த மூன்று உலகக் கடவுளர்கள் தங்களுக்கு இடையே பெண் கொடுத்து வாங்கும் வழமை, அதாவது கலப்புத் திருமணம், தடை செய்யப்பட்டிருந்தது.
இதனிடையில் கடவுளர்களின் தலைவனாகிய ஜேட் பேரரசரின் காதுகளுக்கு, இந்தக் காதல் கதை எட்ட, உடனே ஒரு கடவுளை அனுப்பி, என்ன நடக்கிறது என்று விசாரித்து வர பணித்தார். விசாரித்ததில், விதிகளுக்கு புறம்பாக இந்த காதல் இணை சந்திக்கும் உண்மை தெரியவந்தது. உடனே, கிழக்குக் கடலின் டிராகன் மன்னனை வரவழைத்து, அவனுடைய மகனை அடக்கி வைக்குமாறு கூறினார் ஜேட் பேரரசர்.