டிராகன் மன்னன் தன் மகனை நோக்கி, இந்தத் திருமணம் சம தகுநிலை கொண்டதாக அமையாது, மட்டுமல்ல, தேவலோக விதிக்கு புறம்பானதும் கூட. இதற்காக உன்னை மட்டுமல்ல, நம் குடும்பம் முழுவதையும் ஜேட் பேரரசன் தண்டிப்பார். உனக்கு அவளை நிச்சயம் பார்த்துத்தான் ஆக வேண்டுமென்றால், இரவு நேரத்தில் மேகங்களில் ஏறிச்செல், ஆனால், காற்றையோ, மழையையோ நீ கொண்டுச் செல்லக்கூடாது" கூறினான்.
நீருலக கடவுளர்கள் பயணிக்க மழையும், காற்றும் தேவை. எனவே டிராகன் மன்னன் சொல்லவந்தது இதுதான், நீ உன் காதலியை சந்திக்கக்கூடாது. காதலியை நினைத்து நினைத்து இளவரசன் மேலும் வாடி வதங்கினான்.