ஒருநாள் லுங் மலையை பார்த்து நின்றபடி ஏக்கப் பெருமூச்சு விட்ட இளவரசன் அருகே பறந்து வந்த செம்பகப் பறவை, இளவரசே கவலைவேண்டாம், மனதை தளரவிடாதீர்கள். உங்கள் காதலியை காணச்செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள், நேரம் வந்ததும் நான் கூவி உங்களுக்கு கிளம்பும் நேரத்தை அறிவிப்பேன், நீங்களுன் உங்கள் தந்தைக்கு தெரிவதற்கு முன் வீடு திரும்பலாம் என்றது. இதைக்கேட்ட இளவரசனின் மனம் உடனே மலர்ந்தது. அந்தப்பறவை தடவிக்கொடுத்து, என் தந்தை என்னை புரிந்துகொள்ளவில்லை ஆனால் நீ புரிந்துகொண்டாய், நீ நல்ல நண்பன் என்றான். ஆனால், மழையும் காற்றும் கொண்டு செல்லக்கூடாது என்று தந்தை தடையிட்டுருக்க அவன் எப்படி அங்கே செல்வான். மீண்டும் ஏக்கப் பெருமூச்சு. உடனே குதிரை ஒன்று அருகே கனைத்து நின்றது. கவலைவேண்டாம் இளவரசே, உங்களுக்கு மழையும், காற்றும் தேவையில்லை அங்கு செல்ல, நான் உங்களை சுமந்து செல்வேன் என்றது. இதைக் கேட்ட இளவரசன் மகிழ்ந்தான். குதிரையை பரிவோடு தடவி 'நீ ஒரு பெருஞ்செல்வம். என் தந்தை என்னை புரிந்துகொள்ளவில்லை ஆனால் நீ புரிந்துகொண்டாய், நீ நல்ல நண்பன் என்றான். அடுத்த நாளிரவு குதிரையில் ஏறியமர்ந்து, கையில் ஒரு கூட்டில் செம்பகப்பறவையை வைத்துக்கொண்டு லுங் மலைக்கு சென்றான் இளவரசன். மூன்றாண்டுகள் கழித்து தன் காதலனை கண்டு வெள்ளை டிராகன் மகிழ்ச்சியடைந்தாள். நீண்ட காலப் பிரிவுக்குப் பின் கதைகதையாய் பேசிய அவர்களை நேரம் வந்தது புறப்பட என்று செம்பகப்பறவை கூவி நினைவூட்ட, அவனும் குதிரையிலேறி, காதலியிடம் விடைபெற்றுச் சென்றான். ஆக இப்படியாக யாருக்கும் தெரியாமல் இளவரசன் தன் காதலையை சென்று சந்தித்தான்.