இன்றைய நிகழ்ச்சியில், "மக்கெளவில் ட்சாங் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி" பற்றிக் கூறுகின்றோம். அறிவிப்பாளர் தமிழன்பன்.
2013ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 4ஆம் நாள், மக்கெள கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு மையத்தில், ட்சாங் ஸ சுயுன் அம்மையார், மக்களுக்கு அவரது படைப்புகளை அறிமுகம் செய்துக் கொண்டிருந்தார். அந்த படைப்புகள், வண்ண களிமண் சிற்பங்களாகும். அவற்றில், பண்டைக்காலத்தில் மக்கெளவில் மீன்பிடித் தொழில் செய்த மகளிர், மக்கெளவில் மதப்பரப்புரை மேற்கொண்ட மத்தியே ரிச்சி, அண்மைகாலத்தில் சீனாவின் சிந்தனையாளர் ட்செங் குவான் யிங், போர்த்துகீஸிய குழந்தைச் சிற்பம் முதலியவை இடம்பெறுகின்றன.