மக்கொவில் "ட்சாங் களிமண் சிற்ப" கலையின் செல்வாக்கை விரிவாக்க ட்சாங் ஸ சுயுன் அம்மையார் பாடுபட்டு வருகின்றார். தியேன் ஜின், பெய்சிங் ஆகிய நகரங்களில், "ட்சாங் களிமண் சிற்ப" கலையின் வாரிசுகளாக, ட்சாங் ஸ சுயுன் அம்மையாரின் குடும்பத்தினரும், அக்கலையின் வளர்ச்சியைத் தூண்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் வணிகமயமாகும் போக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரமான போட்டிகள் கொண்டுள்ள சந்தையில் பாரம்பரியக் கலை தொடர்ந்து இருப்பது, எளிதானதல்ல. தங்களது செல்வாக்கை பரவல் செய்யும் பொருட்டு, அவர்கள் "ட்சாங் களிமண் சிற்ப கலையின்" வாரிசென களிமண் சிற்பக் கலைஞர்கள் சிலர் பறைசாற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்தகைய கலைஞர்களின் மீது வழக்கு தொடுத்து வருவதாக "ட்சாங் களிமண் சிற்ப கலையின்" 6வது தலைமுறை வாரிசு ஒருவர் தெரிவித்தார்.
அறைகூவல்களை எதிர்நோக்குகிற போதிலும், "ட்சாங் களிமண் சிற்ப கலை" அதன் ஈர்ப்பு ஆற்றலைச் சார்ந்து, சந்தையில் இன்னமும் காலூன்றி நிற்க முடிகிறது என்று ட்சாங் ஸ சுயுன் கருத்து தெரிவித்தார்.