• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பண்பாடு:மக்கெளவில் ட்சாங் களிமண் சிற்பக் கலையின் வளர்ச்சி
  2013-02-19 10:19:08  cri எழுத்தின் அளவு:  A A A   

"களிமண் சிற்பங்களில் விவரிக்கப்படும் வரலாறு" என்பது ட்சாங் ஸ சியுனின் கண்காட்சியின் தலைப்பாகும். ஜனவரி திங்கள் 4ஆம் நாள் காட்சிக்கு வைக்கப்பட்ட களிமண் சிற்பங்கள், ட்சாங் ஸ சுயுன் அம்மையாரால் படைக்கப்பட்ட மக்கெள "பண்பாடுகளின் கூட்டு நினைவு" என்ற படைப்புகளில் ஒரு பகுதியாகும். 2004ஆம் ஆண்டு, ஹாங்காங்கின் சீன மொழி பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்தைப் பெற்ற அவர் மக்கெள சென்றார். அப்போது "ட்சாங் களிமண் சிற்பக்" கலைக்கூடத்தை நிறுவும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. பின்னர், மக்கெள நிதியம் அவருக்கு நிதியுதவியை வழங்கியது. மக்கெளவில் ட்சாங் ஸ சுயுன் அம்மையாரின் இலட்சியம் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. மக்கெள பண்பாட்டோடு பொருந்தி சிற்பக் கலையை வளர்க்கும் பண்பு தன்னை மிகவும் ஈர்த்துள்ளதாக ட்சாங் ஸ சுயுன் அம்மையார் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7 8
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040