"மக்கெளப் பண்பாடுகளில், செழிப்பான அம்சங்கள் இடம்பெறுகின்றன. அவற்றில் மாசுபாடு இல்லாத பசுமை அம்சங்கள் பல அதிகமாக இருக்கின்றன. தவிர, மக்கெள பண்பாடுகளில், மேலை நாட்டுப் பண்பாடும் ஒன்றியுள்ளது. இந்நகர் பல பண்பாடுகளோடு ஒன்றாக பொருந்தும் பண்பு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது" என்றார் அவர்.
படிப்படியாக, மக்கெளவின் பண்டைக்கால பிரமுகர்களும், மக்கெள மக்களின் நடையுடை பாவனைகளும், ட்சாங் ஸ சுயுன் அம்மையாரின் கைகளில், வண்ண களிமண் சிற்பங்களாக, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ட்சாங் ஸ சுயுன் அம்மையார் கண்காட்சியை நடத்தும் இடம், Dr. Carlos D'Assumpção பூங்காவில் இருக்கிறது. Dr. Carlos D'Assumpção போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்தவர். அவரது பெயர் இப்பூங்காவுக்கு சூட்டப்பட்டுள்ளது. இப்பூங்காவின் இறுதியில், Kwan-yin உருவம் ஒன்று நிமிர்ந்து நிற்கியது.