பழங்களை சாப்பிடுவது - உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால், 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
தேநீர் அருந்துவது - சிலர் உணவுக்குப் பின் தேநீர் அருந்துவார்கள். ஆனால் அவ்வாறு அருந்துவது தவறு. ஏனெனில் தேனீரில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே அப்போது உணவில் உள்ள புரதச் சத்தானது, அளவிற்கு அதிகமாகி, பின் செரிமானமடையாமல் வயிற்றில் சிரமத்தை ஏற்படுத்தும்.
இடுப்புப் பட்டையானபெல்ட்டை கழற்றி வைப்பது - உணவு உண்ட பின்பு, வயிறு இறுக்குவது போல் உள்ளது என்று சிலர் பெல்ட்டை கழற்றுதல் அல்லது தளர்த்துதல் என்று செய்வார்கள். இவ்வாறு உடனே கழற்றி வைத்தால், குடலானது சில நேரங்களில் திசை திரும்பி, அடைப்பு கூட ஏற்படும்.