குவெய் இசை நாடகத்தின் நீண்டக்கால வரலாற்றில், பல முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. குவெய் இசை நாடகக் குழுக்கள் பெய்சிங்கிற்கு வந்த பிறகு, அன்குவெய் மாநிலத்தில் குவெய் இசை நாடகம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைய தொடங்கியது. நவ சீனா நிறுவப்பட்ட பின், அன்குவெய் மாநிலத்தில் 50க்கு அதிகமானோர் இடம்பெறும் புதிய தலைமுறை குவெய் இசை நாடகத் திறமைசாலிகள் பயிற்றுவிக்கப்பட்டனர். 1959ஆம் ஆண்டு, இந்த தொகுதி இளம் நடிகர்கள் பெய்சிங்கிற்கு வந்து அரங்கேற்றினர். இச்சம்பவம், "வரலாற்றில் குவெய் இசை நாடகக் குழுக்களின் இரண்டாவது பெய்சிங் வருகை" என நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. மெய் லான் ஃபாங், மா லியான் லியாங், ஒவ் யாங் யு ச்சியன், ட்சாங் ஜுன் ச்சியு முதலிய கலைஞர்கள் பெய்சிங்கில் இவ்விளம் நடிகர்களின் அரங்கேற்றங்களைக் கண்டு இரசித்தனர்.