பின்னர், குவெய் இசை நாடக அரங்கின் உறுப்பினர்கள் ஷாங்காய், ஹாங்சோ உள்ளிட்ட இடங்களில் அரங்கேற்றினர். அவர்களின் தலைசிறந்த அரங்கேற்றங்கள், மக்களிடையே பாராட்டைப் பெற்றன. 1990ஆம் ஆண்டு "நான்கு பெரிய குவெய் இசை நாடகக் குழுக்கள் பெய்சிங்கிற்கு வந்ததன்" 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அன்குவெய் மாநிலத்தின் குவெய் இசை நாடகக் குழுக்கள், பிரதிநிதித்துவம் வாய்ந்த நான்கு பாரம்பரிய குவெய் இசை நாடகங்களை ஒத்திகை செய்து, அரங்கேற்றின. பெய்சிங்கில் நடைபெற்ற இந்த அரங்கேற்றங்கள், குவெய் இசை நாடகக் குழுக்களுக்கு ஆழமான முக்கியத்துவம் வாய்ந்தவை. "வரலாற்றில் குவெய் இசை நாடகக் குழுக்களின் மூன்றாவது பெய்சிங் வருகை" என இச்சம்பவம் அழைக்கப்படுகிறது. அதற்கு பின், அன்குவெய் மாநிலத்தின் குவெய் இசை நாடக அரங்கு உலகின் பல்வேறு இடங்களில் அரங்கேற்றங்களை நடத்தத் துவங்கியது.