இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, பெள ச்சி நகரில் உள்ள ஒரு பூங்காவில் பொது மக்கள் ச்சின் ச்சியாங் இசை நாடகத்தை பாடுவதாகும்.
குளிர்காலத்தில் ஒரு நாள் விடியற்காலையில், பெள ச்சி நகரின் சாலைகள் உறைபனி வெண்திரை போல் மூடப்பட்டன. அங்குள்ள வெப்ப நிலை மிகவும் தாழ்வாக இருந்தது. ஆனால் ச்சின் ச்சியாங் கலை ஆர்வலர்களின் பேரார்வத்தை அந்த குளிரால் தடுக்க முடியவில்லை. யன்தியுவான் பூங்காவில், நாள்தோறும் ச்சின் சியாங் இசை நாடக ஆர்வலர்கள் இணைந்து, அவர்களின் விருப்பப்படி ச்சின் சியாங் அரங்கேற்றக் குழுவை உருவாக்கினர். பொது மக்கள் இக்குழுவினரின் அரங்கேற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, அங்கே ஒன்று திரள்கின்றனர்.